states

img

கார் விபத்துக்குள்ளாகி தீ பிடித்ததில் 5 பேர் உயிரிழப்பு  

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற கார் விபத்துக்குள்ளாகி தீ பிடித்ததில் பக்தர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.  

விஜயநகரை சேர்ந்த ராம்மூர்த்தி என்பவர் திருப்பதிக்கு சாடி தரிசனம் செய்ய சென்று கொண்டிருந்தனர். அப்போது சித்தூர் மாவட்டம் ஜித்தேப்பள்ளியில், சாலை தடுப்பின் மீது மோதி கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு குழந்தை உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்த நிலையில்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

கார் தடுப்பு சுவரில் மோதி தீ பிடித்ததால் காரில் இருந்து வெளியேற முடியாததால் 5 பேரும் உயிரிழந்தனர். 

;